கருவாக ஈரைந்து மாதங்கள் நான் கொடுத்த சுமையையும்
பிறக்கும் போது நான் கொடுத்த வலியையும்
தாய்மை என்னும் பெயரில் தாங்கிகொண்டாய்.
தவழ பழகும் போது என் தரையானாய்,
நடக்க பழகும் போது என் கால்களானாய்,
அழும் போது என் அழுகையானாய்,
சிரிக்க பழகும் போது என் சிரிப்பானாய்,
மொத்தத்தில் நீ நானாக ஆனாய்!!
என் முதல் எழுத்தை கற்று தந்தவளும் நீயே,
பள்ளியில் என்னை விட்டு சென்றவளும் நீயே!!!
என் மழலை பேச்சினை இரசித்தாய்,
எனக்கு படிப்பினை கொடுத்தாய்.
நான் வளர வளர என்னுடன் வளர்ந்தாய்,
உன் தோழை தாண்டி வளர்ந்ததனால் என் தோழியானாய் .
நான் படிக்க நீ கண் விழித்தாய்.
என் கிண்டல்களை இரசித்தாய்
என் தோல்விகளில் எனக்கு தோள் கொடுத்தாய்
என் இன்பங்களில் எனக்கு கை கொடுத்தாய்,
கண்டிக்கும் போது பாசத்தையும்,
பகிர்ந்து கொள்ளும்போது தோழமையும் கொடுத்தாய்.
அனைத்தையும் தாண்டி
என் மொக்கைகளுக்கு பொறுமையாக செவி கொடுத்தாய்.
என் ஏழேழு ஜென்மங்களிலும்
நீயே ! நீ மட்டுமே!
என் தாயாக வேண்டும்!!!!!!!