Monday, December 29, 2008

புதிய ஆண்டின் இனிய துவக்கம்

கடந்து சென்ற ஆண்டின்

பசுமையான நினைவலைகள் ,

உள்ளத்தில் ஊஞ்சலாடி கொண்டிருக்க,

கடக்க இருக்கும் ஆண்டை பற்றிய

கனவுகள் கண்களில் கவி பாடிகொண்டிருக்க ,

புதிய ஆண்டு துவங்கி கொண்டிருக்கும்

இந்த இனிய நாளில்

நம் மகிழ்ச்சி பயணத்தை,

புதிய கோணத்தில் ,

இனிதே துவக்குவோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Sunday, December 21, 2008

அன்பு தோழியே !!!!!

கவிதை எழுத நினைத்தவுடன்
நினைவுக்கு வருவது உன் பெயர் தான்,
மனதில் நிழலாடுவது உன் நினைவுகள் மட்டும் தான்.
ஒன்றா இரண்டா,
உன்னுடன் கழிந்த நாட்கள்!
என்னை சுற்றி பல பேர் இருந்தாலும்,
எனக்குள் மலர்ந்த நட்பு உனக்கு மட்டும் தான் சொந்தம்.
நட்புக்கு மௌனமும் ஒரு மொழி என்று,
உன்னிடம் புரிந்து கொண்டேன்.
நான் கொஞ்சியதும் உன்னை மட்டும் தான்,
கெஞ்சியதும் உன்னிடம் மட்டும் தான்.
செல்லமாக கோபித்து கொண்டு தள்ளி அமர்ந்தால்
என்னுடன் நெருங்கி அமர்ந்து,
"என்ன ஆச்சு ?" என்பாய்,
ஊடலிலும் இன்பம் கண்டது உன்னிடம் மட்டும் தான்.
உன்னிடம் சண்டை போடாமல் என் நேரம் கழிந்தது இல்லை.
உன்னிடம் 'சாரி' கேட்காமலும் என் நாட்கள் முடிந்தது இல்லை.
நாட்கள் நகரலாம் ,
ஆனால் உன்னுடனான இந்த நெருக்கம் என்றும் குறையாது!!!!!