கருவின் உரு கைகளில் தவழுகையில் ,
காகித கப்பல் கரை சேர்கையில் ,
பட படக்கும் பட்டாம்பூச்சி உள்ளங்கையினுள் துடி துடிக்கையில் ,
எதிர்பாராத விடுமுறைகளில் ,
மொட்டை மாடி நிலவில் அன்னை மடி தொழுகையில் ,
பிடிக்காத விவாதமும் பிடித்தவர்களிடம் விவாதிக்கையில் ,
எதிர்பார்க்கும் தருணமும் எதிர்பாராமல் நிகழ்கையில் ,
மழையில் நனைந்து கண்ணீர் கலந்து நடக்கையிலும்
துடைத்து விடும் கைகளுடனும் ,
உவமையில்லா உவகையின் கிறுக்கல்கள் !!!!