Monday, November 28, 2011

நனையாத ஈரங்கள் !!!

கருவின் உரு கைகளில் தவழுகையில் ,


காகித கப்பல் கரை சேர்கையில் ,


பட படக்கும் பட்டாம்பூச்சி உள்ளங்கையினுள் துடி துடிக்கையில் ,


எதிர்பாராத விடுமுறைகளில் ,


மொட்டை மாடி நிலவில் அன்னை மடி தொழுகையில் ,


பிடிக்காத விவாதமும் பிடித்தவர்களிடம் விவாதிக்கையில் ,


எதிர்பார்க்கும் தருணமும் எதிர்பாராமல் நிகழ்கையில் ,


மழையில் நனைந்து கண்ணீர் கலந்து நடக்கையிலும்


துடைத்து விடும் கைகளுடனும் ,


உவமையில்லா உவகையின் கிறுக்கல்கள் !!!!



2 comments:

Lakshmi Chockalingam said...

'நனையாத ஈரங்கள்' நனைக்கட்டும் இன்னும் சில நெஞ்சங்களை! ஈரங்களால் நனையாத பல நெஞ்சங்களையும் உவமையில்லா உனது கவிதைகள் நனைக்கலாகட்டும்!!!

Padmaja said...

I would like to add one more line to the poem: "unadhu kavithaigal padikkayil" ... as one of the "nanaiyadha eerangal".... :)
PS: Sorry if wrong use of grammar etc etc :)