கருவின் உரு கைகளில் தவழுகையில் ,
காகித கப்பல் கரை சேர்கையில் ,
பட படக்கும் பட்டாம்பூச்சி உள்ளங்கையினுள் துடி துடிக்கையில் ,
எதிர்பாராத விடுமுறைகளில் ,
மொட்டை மாடி நிலவில் அன்னை மடி தொழுகையில் ,
பிடிக்காத விவாதமும் பிடித்தவர்களிடம் விவாதிக்கையில் ,
எதிர்பார்க்கும் தருணமும் எதிர்பாராமல் நிகழ்கையில் ,
மழையில் நனைந்து கண்ணீர் கலந்து நடக்கையிலும்
துடைத்து விடும் கைகளுடனும் ,
உவமையில்லா உவகையின் கிறுக்கல்கள் !!!!
2 comments:
'நனையாத ஈரங்கள்' நனைக்கட்டும் இன்னும் சில நெஞ்சங்களை! ஈரங்களால் நனையாத பல நெஞ்சங்களையும் உவமையில்லா உனது கவிதைகள் நனைக்கலாகட்டும்!!!
I would like to add one more line to the poem: "unadhu kavithaigal padikkayil" ... as one of the "nanaiyadha eerangal".... :)
PS: Sorry if wrong use of grammar etc etc :)
Post a Comment