Monday, November 21, 2011

கிராமத்து தேவதைகள்

செம்மண் புழுதியில் புரண்டாலும் ,
இன்னும் கலங்கப்படாத நெஞ்சங்கள்.
பட்ட காயத்திற்கு மண்ணே மருந்தாகும் ஊர் மகத்துவம் .
அந்நியம் பார்க்காத அப்பத்தாக்கள்,
ஒருக்களித்து படுத்தாலும் மாளிகையாய் தெரியும் தென்ன ஓலை குடிசைகள் ,
தன வீட்டு கலியாணமாய் கொண்டாடப்படும் ஊர் திருவிழா ,
அடுத்த வீட்டு josehph சித்தப்பாவும்
எதிர் வீட்டு அப்துல்லா பெரியப்பாவும்
தரும் தீபாவளி பண்டங்கள் ,
ஆறு மணிக்கு மேல் களைகட்டும் தெரு
விவாத மேடையை மாறும் திண்ணைகள் ,
விட்டதே பார்த்து வெறுந்தரையில் படுத்தாலும்
நிம்மதியாய் வரும் தூக்கம் ,
வெள்ளந்தியாய் தம்மக்கள் பெற்ற
கிராமத்து தாயே நீ நீடூழி வாழ வணங்குகிறேன் !!!

3 comments:

Swathi said...

"அடுத்த வீட்டு josehph சித்தப்பாவும்
எதிர் வீட்டு அப்துல்லா பெரியப்பாவும்
தரும் தீபாவளி பண்டங்கள்"

-Epic Good Seetha! :)

Lakshmi Chockalingam said...

So conventional an idea, yet so very novel the expression... Brilliant use of oxymora! Way to go!!!

Padmaja said...

Feel of village brought out excellently !!! :) Beautifull !!!