Monday, November 24, 2008

எந்தன் உயிர் தோழியே !

என்னுள் வார்த்தைகளாக பதிந்த என் வாக்கியமே !

உன்னுடன் திரிந்த நாட்கள் என் வாழ்வின் அங்கங்கள் !நாம் இருவரும் ,

சிரித்து மாட்டிக்கொண்ட சில நிமிடங்கள் ,

தமிழ் கடலில் தத்தளித்த பல நாட்கள் ,

படிக்காமல் எழுதிய பல தமிழ் கிறுக்கல்கள் ,

நடந்து செல்கையில் சில நெருடல்கள் ,

எழிலோவியமான அந்நாட்கள் !
எனக்குள் பாதசுவடுகள் பல தெரியலாம் ,
பல கரையலாம்,
ஆனால் ,
உன் பாதசுவடு மட்டும் ,

என் நெஞ்சில் நீங்காமல் பதிந்து விட்டது .

என்றும் அழியாது !