Sunday, September 21, 2008

மனதின் துடிப்பு !!

உன்னிடம் ஒன்று சொல்ல
காற்றை அனுப்பினேன்
உன்னை தீண்டிவிடுமோ என்று போக மறுத்தது
மழையை அனுப்பினேன்
உன்னை நனைத்து விடுமோ என்று நகர மறுத்தது
நிலவை அனுப்பினேன்
உன் கனவை கலைத்துவிடுமோ என்று கூற மறுத்தது
இவை அனைத்தும் ஒதுங்கிவிட
என் மனம் மட்டும் தைரியமாக உன்னிடம் சொல்கின்றது
"என்னை மன்னித்துவிடு" .

Wednesday, September 17, 2008

கனா காலம்!!!!!!

தென்றலோடு தென்றலாய் தவழ்ந்த நாட்கள்
மழையோடு கொஞ்சி விளையாடிய பருவங்கள்
கோபத்தின் தோழனாக சில நாட்கள்
நித்ராதேவியின் பிராணநாதனாக சில மணி நேரங்கள்
கூண்டோடு மாட்டிக்கொண்ட சில நிமிடங்கள்
ஒன்றுமே தெரியாமல் விழித்த ஒரு மணி நேரம்
இல்லை பல மணி நேரம்
கணக்கை கணக்கு பண்ண முடியாமல் எழுதிய கிறுக்கல்கள்
இயல்புகளின் இயல்புகளை இயல்பாக கவனித்த சில நொடிகள்
தமிழில் எழுந்த மிக பெரிய சந்தேகங்கள்
மணிமகுடமாக,
என்றும் அலுக்காத எங்கள் அரட்டைகள்
இவைஅனைத்தும் கலந்ததே எங்கள்
எட்டு மணி நேர சொர்கலோகம்
அதுவே பள்ளிக்காலம்
அது ஒரு கனா காலம்!!!!!!

Friday, September 5, 2008

என் அன்பே !!!

படபடக்கும் பார்வைகள்
துடிதுடிக்கும் உதடுகள்
சில்லரிக்கும் சொற்கள்
குழைந்தைதனமான குறும்புகள்
கட்டிபோடும் கட்டுப்பாடுகள்
செல்லமான தண்டனைகள்
சின்ன சின்ன ஊடல்கள்
இவை அனைத்தும் கலந்த காவியம் நீ !!!!!!!