தென்றலோடு தென்றலாய் தவழ்ந்த நாட்கள்
மழையோடு கொஞ்சி விளையாடிய பருவங்கள்
கோபத்தின் தோழனாக சில நாட்கள்
நித்ராதேவியின் பிராணநாதனாக சில மணி நேரங்கள்
கூண்டோடு மாட்டிக்கொண்ட சில நிமிடங்கள்
ஒன்றுமே தெரியாமல் விழித்த ஒரு மணி நேரம்
இல்லை பல மணி நேரம்
கணக்கை கணக்கு பண்ண முடியாமல் எழுதிய கிறுக்கல்கள்
இயல்புகளின் இயல்புகளை இயல்பாக கவனித்த சில நொடிகள்
தமிழில் எழுந்த மிக பெரிய சந்தேகங்கள்
மணிமகுடமாக,
என்றும் அலுக்காத எங்கள் அரட்டைகள்
இவைஅனைத்தும் கலந்ததே எங்கள்
எட்டு மணி நேர சொர்கலோகம்
அதுவே பள்ளிக்காலம்
அது ஒரு கனா காலம்!!!!!!
2 comments:
everythin's fine.....excellent......superb..as i already know.but ne swargalogamnu naragatha chonna paaru athu mattum ...i dunno understan.:):)
actura(unnaku mattum thaan psedonym irukkudha)
namma clas pathi ulladu ullapadi describe panni irukka.hats off.......
Post a Comment