Sunday, September 21, 2008

மனதின் துடிப்பு !!

உன்னிடம் ஒன்று சொல்ல
காற்றை அனுப்பினேன்
உன்னை தீண்டிவிடுமோ என்று போக மறுத்தது
மழையை அனுப்பினேன்
உன்னை நனைத்து விடுமோ என்று நகர மறுத்தது
நிலவை அனுப்பினேன்
உன் கனவை கலைத்துவிடுமோ என்று கூற மறுத்தது
இவை அனைத்தும் ஒதுங்கிவிட
என் மனம் மட்டும் தைரியமாக உன்னிடம் சொல்கின்றது
"என்னை மன்னித்துவிடு" .

2 comments:

ѕєℓνα said...

SOOOOOOOOOOPER
romba nalla irukku

rams said...

none other than u had asked 'sorry' such poetically