Thursday, September 11, 2014

பார்ப்பன அனைத்தும் அரசியலாம் !!

கருவரை அரியாசனம் தொடங்கி , கல்லறையில் கரையும் வரை அரசியலின் சுவடுகள் .இரு உயிர் ஓருயிராய் மாறுகையில் பாலின சர்ச்சை , ஒரு பாலருக்கோ பாலியல் பிரச்சனை .கோடி மக்களின் வாழ்வியல் திருத்தங்கள் ஏற்பட தலைவனாய் மாறுகிறோம் , நமக்குள் வரும் மனத்தாங்கலை மட்டும் ஊரிடம் சென்று மன்றாடுகிறோம் .மேடை முகமூடியில் முகநகை உதிர்பவனை ரோஷத்துடன் அரசியல் குற்றவாளி என்று அழைக்கின்றோம் , நாளும் முகநக மட்டும் நண்பனாய் இருபவனிடம் வெட்கமின்றி ஏமாளியாய் கூழ் குடிகின்றோம் .தனக்கென வருபவள் தோழியாய் , அவனுக்கென வந்தால் அவள் ஆவாள் காதலியாய் ! நாம் எழுதுகையில் மட்டும் கிசுகிசுக்கள் அடுத்தவரின் Biography அந்தஸ்து பெறும் . சர்வதிகாரம் இன்றி குடிகள் அனைவரும் சமமாய் இயற்ற வேண்டிய அழகிய அரசியல் காவியத்தின் இன்றைய நிலை 'குழாயடி சண்டையில் ' !  எனக்கு  இருக்கும் கருத்து வேறுபாடு , என் கையாலகாததனம் , மற்றவரை பற்றி பெருமையாய் புறம் பேசுதல் , அடுத்தவர்களுக்கு மட்டும் வரும் குறைகள் என நம் குறைபாடுகளுக்கு நாம் கூறிக்கொள்ளும் எழுத படாத விதி 'அரசியல்' ! தன குடும்ப வழக்குக்கு அரசியல் என பெயரிட்டு ,இங்கு இல்வாழ்கை காணும் (இந்த ) அரசியல்வாதிகள் கூறுவது போல் (இவர்கள்) அரசியல் ஒரு சாக்கடை தான்  !