கூச்சலிட்டு கொண்டாடி திரிந்த காலமது !!!
அழுகையை கூட அணு அணுவாக ரசித்த நிமிடங்கள் ,
சின்ன சின்ன சண்டைகள் ,
பொழுது போகாமல் கேட்ட சாரிகள்,
நொடியில் மறைந்து போன கோபங்கள் ,
கண்சிமிட்டி விளையாடிய நாழிகைகள் ,
ஸடைலாக சைட் அடித்த சில நிமிடங்கள் ,
கிளாஸ் கவனிக்காமல் கதை அடித்த உதடுகள் ,
lunch பரேகி்ல் சிந்திய சிரிபொலிகள்,
வண்டி ஓட்டி சுற்றி திரிந்த நாட்கள்,
கீழே விழுந்தும் அதை ரசித்து சிரித்த மணி துளிகள்,
வாருவதையே தொழிலாக கொண்ட கூட்டங்கள்,
அருகில் இருந்து ஆறுதல் சொன்ன கைகள் ,
தொலைவில் இருந்து ரசித்த கண்கள்,
கோட் வோர்ட் சொல்லி சிரித்த இதழ்கள் ,
பொழுது போகாமல் எழுதிய கிறுக்கல்கள் ,
புரியாமல் வந்த சில விரிசல்கள் ,
அவ்வப்போது வந்த தனிமைகள்,
எப்போதும் இருந்த குறும்புகள்,
இவை அனைத்தும்
காலங்களின் கைகளுக்குள்
மறைந்து போகலாம் !
ஆனால் , பள்ளி கால நினைவுகளாக
எங்கள் ஒவ்வொருவருடைய இதயத்தையும்
இதமாக வருடி கொண்டிருக்கும் !!!!!!!!!!