Monday, September 21, 2009

இதமான வருடல்கள் !!!!!

கூச்சலிட்டு கொண்டாடி திரிந்த காலமது !!!

அழுகையை கூட அணு அணுவாக ரசித்த நிமிடங்கள் ,

சின்ன சின்ன சண்டைகள் ,

பொழுது போகாமல் கேட்ட சாரிகள்,

நொடியில் மறைந்து போன கோபங்கள் ,

கண்சிமிட்டி விளையாடிய நாழிகைகள் ,

ஸடைலாக சைட் அடித்த சில நிமிடங்கள் ,

கிளாஸ் கவனிக்காமல் கதை அடித்த உதடுகள் ,

lunch பரேகி்ல் சிந்திய சிரிபொலிகள்,

வண்டி ஓட்டி சுற்றி திரிந்த நாட்கள்,

கீழே விழுந்தும் அதை ரசித்து சிரித்த மணி துளிகள்,

வாருவதையே தொழிலாக கொண்ட கூட்டங்கள்,

அருகில் இருந்து ஆறுதல் சொன்ன கைகள் ,

தொலைவில் இருந்து ரசித்த கண்கள்,

கோட் வோர்ட் சொல்லி சிரித்த இதழ்கள் ,

பொழுது போகாமல் எழுதிய கிறுக்கல்கள் ,

புரியாமல் வந்த சில விரிசல்கள் ,

அவ்வப்போது வந்த தனிமைகள்,

எப்போதும் இருந்த குறும்புகள்,

இவை அனைத்தும்

காலங்களின் கைகளுக்குள்

மறைந்து போகலாம் !

ஆனால் , பள்ளி கால நினைவுகளாக

எங்கள் ஒவ்வொருவருடைய இதயத்தையும்

இதமாக வருடி கொண்டிருக்கும் !!!!!!!!!!