Friday, December 10, 2010

பாதையின் வழி தேடி...

இரவின் கண்கள் நீள ,
கனவின் கதவுகள் திறக்க,
வெண்ணிலவிற்கு துணையாக விழிகளும் மாற,
மூச்சுக் காற்று முயற்சியை சுவாசிக்க,
தவறி விழுந்த பின்னும்
நடை பழகும் குழந்தையின் துணிவுடன்,
மண்ணில் மறைந்திருந்து
விருட்சமாகும் விதையின்
பொறுமை கற்று,
நாளை உதிப்பேன் என்ற நம்பிக்கையில்
இன்று மறையும் சூரியனின் கரம் பற்றி,
தோல்வியில் பக்குவத்தின்
ரகசியம் கண்டு
நடந்தால்
நீ செல்லும் வெற்று பாதையும் மாறும்
வெற்றி பாதையாக....!!!!

3 comments:

Anonymous said...

supe ah iruku pk.......

sri said...

awesome da!!!

Padmaja said...

Truly Inspiring !!!! :)