பருவம் தொடங்கும் முன் பரவசம் ,
தெளிந்த பிறகே வாழ்கை நம் வசம் !
கடையை பார்க்கையில் 50 பைசா ஆசை மிட்டாய் வாங்கியது
அன்றைய ஆசை மனது மனது !
மதுவும் , மாதுவும் இன்றி வேறேதும் தேடாது
இன்று வாழும் போதை மனது !
சப்பு சாமான்களுடன் கனவு இல்லத்தில் வாழ்ந்தது
அன்றைய கபடமற்ற மனது !
Whatsapp -லும், Facebbok -லும் விரல் விந்தையென விரக்தியை அழைத்தது
இன்றைய காளை மனது !
நிலா என்பது பாட்டி கதைக்கு காத்திருந்தது
அன்றைய கிள்ளை மனது,
இரவையே தொலைத்தது வாழும் கிளர்ச்சி மனது !
காதல் என்பதும் அம்மாவின் பாசம் என்றது
அன்றைய பிள்ளை மனது ,
நட்பு கூட மோகத்தின் வாயில் அகப்பட்டது
வாழும் நம் இளமை வயதில் !
குப்பை மேல் குப்பை சேர்ப்பதில் அர்த்தமில்லை ,
இதன் காரணமே இளமை அரசியல் நாம் காணவில்லை !!
No comments:
Post a Comment