முதல் முறை என் மேல் விழுந்த துளியை ,
என்னை பூமிக்கு அனுப்பியதில்
ஆண்டவன் விட்ட ஆனந்த கண்ணீர் என நினைத்தேன் ,
நடுநிசியில் விழித்து எழுந்து அழுது முடித்து ,
விடியற்காலையில் கண்ணுறங்கும் போது நனைத்தது ,
என்னை குளிர்விக்க வானம் தந்த பனித்துளி என குதித்தேன் ,
சுரத்தில் தூங்கும் போது உரசியது
இன்னும் நிற்காத மழையென நடுங்கினேன் ,
இளம் வயதில்,
ஊர் பெயர் தெரியாத பலரை உலகமென நினைத்து ,
கட்டாத கட்டிடம் உடைந்தது என நிற்கும் போதும் ,
என் மேல் காய்ந்தது ,
உப்பு சப்பற்ற என் கண்ணீர் என ஏமாந்தேன் !
இறுதியில் ,
என் குழந்தையை கொஞ்சுகயிலும் ,
குழந்தை உறங்கும் வரை உறங்காமல் இருந்த களைபினிலும் ,
சுரதினில் மழலை உறங்கையில்
வருணனை திட்டி கொண்டு அனுதினமும் அவனுடன் அமர்கையிலும் ,
இளம் வயதில் உப்பு சற்ற கண்ணீர் அவனை வதைகயிலும் ,
உணர்ந்தேன் ,
என் ஏமாற்றத்தை ,
என் விழுந்த அத்தனையும் ,
என் அம்மாவின் வியர்வை துளி என !!
என்னை பூமிக்கு அனுப்பியதில்
ஆண்டவன் விட்ட ஆனந்த கண்ணீர் என நினைத்தேன் ,
நடுநிசியில் விழித்து எழுந்து அழுது முடித்து ,
விடியற்காலையில் கண்ணுறங்கும் போது நனைத்தது ,
என்னை குளிர்விக்க வானம் தந்த பனித்துளி என குதித்தேன் ,
சுரத்தில் தூங்கும் போது உரசியது
இன்னும் நிற்காத மழையென நடுங்கினேன் ,
இளம் வயதில்,
ஊர் பெயர் தெரியாத பலரை உலகமென நினைத்து ,
கட்டாத கட்டிடம் உடைந்தது என நிற்கும் போதும் ,
என் மேல் காய்ந்தது ,
உப்பு சப்பற்ற என் கண்ணீர் என ஏமாந்தேன் !
இறுதியில் ,
என் குழந்தையை கொஞ்சுகயிலும் ,
குழந்தை உறங்கும் வரை உறங்காமல் இருந்த களைபினிலும் ,
சுரதினில் மழலை உறங்கையில்
வருணனை திட்டி கொண்டு அனுதினமும் அவனுடன் அமர்கையிலும் ,
இளம் வயதில் உப்பு சற்ற கண்ணீர் அவனை வதைகயிலும் ,
உணர்ந்தேன் ,
என் ஏமாற்றத்தை ,
என் விழுந்த அத்தனையும் ,
என் அம்மாவின் வியர்வை துளி என !!
No comments:
Post a Comment