பூப்படைந்த மகளின்
கோலத்திலிருந்து நான்
கலைவதற்கு முன்பே ,
நாளை காலை மணமகளாய்
புதுக்கோலம் ,
நீர்கோலமாய் போய்விடுமோ
என் மனகோலம் !
இரவு பந்தியில் உப்பு கம்மி என்ற
கவலை என் வீட்டாருக்கு ,
இனி வரும் அந்தியும் எப்படி போகும்
என்ற பயம் எனக்கு !
அவன் (நாளை முதல் தானே அவர் ),
அவன் , நிறம் பற்றி தெரியவில்லை ,
குணம் பற்றியோ யாரும் சொல்லவில்லை !
மணமகளாய் அனுப்ப என் வீட்டார் துணிந்துவிட்டனர் ,
மகளாய் ஏற்றுக்கொள்ள அவன் வீட்டார் விரும்பிவிட்டனரோ ?
என் பாதையில் துணைவனாய் துணை வருவானா ,
கணவனாய் கல்போல் நிற்பானோ ?
7-மணிக்கு முன் இங்கு சூரியன் எழும்பியதில்லை ,
இனி 5-மணிக்கு அவனை எழுப்புவதில் எனக்கு கஷ்டமில்லை ,
என் பயமோ,
அங்கு சூரியன் கண்களை மூட இடம் தருவரோ ?
இன்று தெரிகிறது ,
ஏன்,
என் அன்னையும் என்னை மகனாய் கேட்டாள் என்று !
கோலத்திலிருந்து நான்
கலைவதற்கு முன்பே ,
நாளை காலை மணமகளாய்
புதுக்கோலம் ,
நீர்கோலமாய் போய்விடுமோ
என் மனகோலம் !
இரவு பந்தியில் உப்பு கம்மி என்ற
கவலை என் வீட்டாருக்கு ,
இனி வரும் அந்தியும் எப்படி போகும்
என்ற பயம் எனக்கு !
அவன் (நாளை முதல் தானே அவர் ),
அவன் , நிறம் பற்றி தெரியவில்லை ,
குணம் பற்றியோ யாரும் சொல்லவில்லை !
மணமகளாய் அனுப்ப என் வீட்டார் துணிந்துவிட்டனர் ,
மகளாய் ஏற்றுக்கொள்ள அவன் வீட்டார் விரும்பிவிட்டனரோ ?
என் பாதையில் துணைவனாய் துணை வருவானா ,
கணவனாய் கல்போல் நிற்பானோ ?
7-மணிக்கு முன் இங்கு சூரியன் எழும்பியதில்லை ,
இனி 5-மணிக்கு அவனை எழுப்புவதில் எனக்கு கஷ்டமில்லை ,
என் பயமோ,
அங்கு சூரியன் கண்களை மூட இடம் தருவரோ ?
இன்று தெரிகிறது ,
ஏன்,
என் அன்னையும் என்னை மகனாய் கேட்டாள் என்று !
No comments:
Post a Comment