Tuesday, May 20, 2014

கலியாண தேனிலா

பூப்படைந்த மகளின்  
  கோலத்திலிருந்து  நான்
    கலைவதற்கு முன்பே ,
நாளை காலை மணமகளாய்
    புதுக்கோலம் ,
 நீர்கோலமாய் போய்விடுமோ
   என் மனகோலம் !

இரவு பந்தியில் உப்பு கம்மி என்ற
      கவலை என் வீட்டாருக்கு ,
இனி வரும் அந்தியும் எப்படி போகும்
     என்ற பயம் எனக்கு !

அவன் (நாளை முதல் தானே அவர் ),
அவன் , நிறம் பற்றி தெரியவில்லை ,
    குணம் பற்றியோ யாரும் சொல்லவில்லை !

மணமகளாய் அனுப்ப என் வீட்டார் துணிந்துவிட்டனர் ,
  மகளாய் ஏற்றுக்கொள்ள அவன் வீட்டார் விரும்பிவிட்டனரோ ?

என் பாதையில் துணைவனாய் துணை வருவானா ,
 கணவனாய் கல்போல் நிற்பானோ ?

7-மணிக்கு முன் இங்கு சூரியன் எழும்பியதில்லை ,
 இனி 5-மணிக்கு அவனை எழுப்புவதில் எனக்கு கஷ்டமில்லை ,
என் பயமோ,
  அங்கு சூரியன் கண்களை மூட இடம் தருவரோ ?

இன்று தெரிகிறது ,
ஏன்,
 என் அன்னையும் என்னை மகனாய் கேட்டாள் என்று !


No comments: