Tuesday, May 20, 2014

தீவிரவாதம்

பல நேரம் குறிஞ்சி மலரும்
  முள்செடியில் மறைவதுண்டு !
பாதையில் இருக்கும் புதரை வெட்டாமல்
  வேறு பாதை எடுத்து செல்கிறோம் ,
வளரும் போது அது நம்மை காயப்படுத்தினால்
   திரும்பி பார்க்கிறோம் !
வெளி வர துடிக்கும் குறிஞ்சி மலரின்
    குரல் மறுக்கப்படுவதினால் ,
முட்களின் மிரட்டல்
   நமக்குள் தீவிரவாதமாய் !!


No comments: